கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரம். ஐவர் மலை, சிவாயமலை, மாணிக்க மலை என்று பல பெயர்கள் வழங்கி வருகின்றன. மூலவர் அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் (திருவாட்போக்கி - சிவபெருமான்) சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இறைவன் ஒன்பதாவது இரத்தினமாக சுயம்புவாக எழுந்தருளி இருப்பதால் இவருக்கு மலைக்கொழுந்தீஸ்வரர் என்று பெயரும் வழங்கி வருகிறது.
காகம் பரவா மலை, நாகம் தீண்டா மலை என்று பல அதிசயங்களால் பெயர் பெற்ற இந்த மலையில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அநேகம். அவற்றில் வைரப்பெருமாள் என்பவர் காட்டிய பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது .
தன் தலையை தானே கொய்து நேர்த்திக் கடன்
தொண்டை நாட்டில் காஞ்சிபுரம் என்ற சிவப்பதியில் முதலியார் இனத்தில் பிறந்தவர் வைரப்பெருமாள் (வைராக்கிய பெருமாள்) என்ற பெயருடைய சிவனடியார். பலகாலம் குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் அய்யர்மலை சென்று இறைவனை வேண்டினார். முரட்டு சிவபக்தரான அவர் தனக்கு தன மனைவி மூலம் குழந்தை பிறந்தால் அதற்கு நேர்த்திக் கடனாக தன தலையை தானே கொய்து காணிக்கை செலுத்துவேன் என்று வேண்டிக் கொண்டார். சிவனுக்காகவே வாழ்ந்து வந்த அவருடைய வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றி சோதிக்க எண்ணினார். இதன் பலனாக அவர் மனைவி அழகிய குழந்தைக்குத் தாயானாள் .
தம் வேண்டுதலை முடிக்க எண்ணி அய்யர்மலை வந்து பதினெட்டாம் படியில் நின்றபடி தம் தலையை தானே வாளால் அறுத்துக் கொண்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றினார். மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் வந்தது. தாம் வேண்டிக்கொண்டபடி வாக்கில் பிறளாது சிரசை கொய்து கொண்ட சிவனடியாரின் பக்தியால் உளமகிழ்ந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனர். விண்ணில் வேத வாத்தியங்கள் முழங்கின. சிவபெருமான் தம் சிவனடியார் முன் தோன்றி அவருடைய பக்தியினை மெச்சி வரமருள சித்தமானார்.
சிவபெருமான் தம் சிவனடியார் முன் தோன்றி அவருடைய பக்தியினை மெச்சி வரமருள சித்தமானார். இறைவனின் சித்தமறிந்த வைராக்கிய பெருமாள் இறைவனிடம் மூன்று வரங்களைக் கேட்டுப் பெற்றார்:
1. இறைவனுக்குச் சூடிய மாலைகள் முதலில் இவருக்கே சூட்டப்படும்.
2. இறைவனுக்கு காட்டிய கற்பூர ஆரத்தி பின் முதல் மரியாதையாக இவருக்குத்தான் காட்டப்படுகிறது.
3. அம்மனுக்கு படைத்த தளிகை இவருக்கே அளிக்கப்படுகிறது.
மலையின் அடிவாரத்தில் இவர் உடம்பின் அடிப்பாகம் ஒரு சன்னதியாகவும், நடுப்பாகம் மலைக்கு செல்லும் நடு வழியில் ஒரு சன்னதியாகவும், தலை மலைமேல் இறைவன் சன்னதிக்கு மிக அருகில் ஒரு சன்னதியாகவும் அமைந்துள்ளது.
தேனும் தேங்காய்ப்பாலும் மட்டும்தான் இவருக்கு அபிசேகம். இத்தலத்தில் இவர் மிகவும் விசேசமானவர்.
காகம் பரவா மலை, நாகம் தீண்டா மலை என்று பல அதிசயங்களால் பெயர் பெற்ற இந்த மலையில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அநேகம். அவற்றில் வைரப்பெருமாள் என்பவர் காட்டிய பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது .
தன் தலையை தானே கொய்து நேர்த்திக் கடன்
தொண்டை நாட்டில் காஞ்சிபுரம் என்ற சிவப்பதியில் முதலியார் இனத்தில் பிறந்தவர் வைரப்பெருமாள் (வைராக்கிய பெருமாள்) என்ற பெயருடைய சிவனடியார். பலகாலம் குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் அய்யர்மலை சென்று இறைவனை வேண்டினார். முரட்டு சிவபக்தரான அவர் தனக்கு தன மனைவி மூலம் குழந்தை பிறந்தால் அதற்கு நேர்த்திக் கடனாக தன தலையை தானே கொய்து காணிக்கை செலுத்துவேன் என்று வேண்டிக் கொண்டார். சிவனுக்காகவே வாழ்ந்து வந்த அவருடைய வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றி சோதிக்க எண்ணினார். இதன் பலனாக அவர் மனைவி அழகிய குழந்தைக்குத் தாயானாள் .
தம் வேண்டுதலை முடிக்க எண்ணி அய்யர்மலை வந்து பதினெட்டாம் படியில் நின்றபடி தம் தலையை தானே வாளால் அறுத்துக் கொண்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றினார். மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் வந்தது. தாம் வேண்டிக்கொண்டபடி வாக்கில் பிறளாது சிரசை கொய்து கொண்ட சிவனடியாரின் பக்தியால் உளமகிழ்ந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனர். விண்ணில் வேத வாத்தியங்கள் முழங்கின. சிவபெருமான் தம் சிவனடியார் முன் தோன்றி அவருடைய பக்தியினை மெச்சி வரமருள சித்தமானார்.
சிவபெருமான் தம் சிவனடியார் முன் தோன்றி அவருடைய பக்தியினை மெச்சி வரமருள சித்தமானார். இறைவனின் சித்தமறிந்த வைராக்கிய பெருமாள் இறைவனிடம் மூன்று வரங்களைக் கேட்டுப் பெற்றார்:
1. இறைவனுக்குச் சூடிய மாலைகள் முதலில் இவருக்கே சூட்டப்படும்.
2. இறைவனுக்கு காட்டிய கற்பூர ஆரத்தி பின் முதல் மரியாதையாக இவருக்குத்தான் காட்டப்படுகிறது.
3. அம்மனுக்கு படைத்த தளிகை இவருக்கே அளிக்கப்படுகிறது.
மலையின் அடிவாரத்தில் இவர் உடம்பின் அடிப்பாகம் ஒரு சன்னதியாகவும், நடுப்பாகம் மலைக்கு செல்லும் நடு வழியில் ஒரு சன்னதியாகவும், தலை மலைமேல் இறைவன் சன்னதிக்கு மிக அருகில் ஒரு சன்னதியாகவும் அமைந்துள்ளது.
இக்கோவிலை குலதெய்வமாகவும் வெகுசனக் கோவிலாகவும் ஏற்று வழிபடும் பல குடும்பங்களில் குழந்தைகளுக்கு வைரப் பெருமாள் என்று பெயரிடுவது மரபு.
Lucky Club Casino site 2021 | Live dealer and online gaming
பதிலளிநீக்குLucky Club Casino has a wide range of slots, luckyclub games, promotions, bonuses and promotions to choose from. Enjoy our slots and casino games on
A VIP guide to Casino Site | Lucky Club
பதிலளிநீக்குCasino site in South Africa is one of the leading destinations for casino entertainment. It is one of the leading bookmakers luckyclub.live and online casinos of 2018. We